Jan 15, 2011

Catholic News - hottest and latest

இந்தியாவில் ப்ரையில் எழுத்தில் தமிழ் புதிய ஏற்பாடு

சன.14,2011.பார்வையற்றவர்கள் வாசிக்கப் பயன்படுத்தும் ப்ரெயில் எழுத்தில் வடிவமைக்கப்பட்ட புதிய ஏற்பாட்டுப் பிரதியை வெளியிட்டார் இந்தியாவுக்கானத் திருப்பீடத் தூதர் பேராயர் சால்வத்தோரே பென்னாக்கியோ.
சென்னையில் இம்மாதம் 6 முதல் 12 வரை நடைபெற்ற, CCBI என்ற இந்திய கத்தோலிக்க இலத்தீன் ரீதி ஆயர்கள் பேரவையின் 23வது கூட்டத்தில், புதிய ஏற்பாடும் திருப்பாடல்களும் அடங்கிய ப்ரெயில் தமிழ்ப் பிரதியை வெளியிட்டார் பேராயர் பென்னாக்கியோ.
இந்த முயற்சியானது 2006ம் ஆண்டில் பாளையங்கோட்டை இயேசுவின் திருஇதய அருட்சகோதரர்கள் சபையால் தொடங்கப்பட்டது.
இந்தச் சபையினர் நடத்தும் சூசைநகர் அமலராக்கினி பார்வையற்றோர் பள்ளி ஆசிரியர்கள் இதன் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டனர்.

No comments:

Post a Comment